போலி ஆவணங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு தலா 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

போலி ஆவணங்களைத் தயாரித்த சம்பவம் தொடர்பான வழக்கு சிலாபம் உயர் நீதிமன்ற நீதிபதி நவோமி விக்ரமசிங்க முன்னிலையில் (18) விசாரணைக்கு வந்தது.

ஜூன் (07) 2011 அன்று குற்றப் புலனாய்வுத் துறைக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.

காணித்துண்டுகளுக கு 26 போலி பத்திரங்களைத் தயாரித்து அவற்றக விற்பனை செய்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

இதன்படி, வென்னப்புவ பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் அலெக்ஸ் நிஷாந்த பெர்னாண்டோ மற்றும் மஹவெவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்குமே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *